Sid Sriram – Pularaadha Lyrics

புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே ஏ
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை
ஏந்தி வந்தே
உன் இதழும் என் இதழும்
போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி
கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும்
கனிந்து விடும்
தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே)
காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
ஆஆ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆ
கண்ணே கண்ணே கீச்சொலியே
கீச்சொலியே
நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய்
கேட்குதே
ஒப்பனைகள் ஏதுமற்ற
உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற
கள்ள சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்
குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை
நெஞ்சில் இனிக்கும்
பேசாத பாஷையாய்(பேசாத பாஷையாய்)
உன் தீண்டல் ஆகுதே(உன் தீண்டல் ஆகுதே)
தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி
ஹோ ஓ ஓஓ ஹோ ஓஒ ஹோ ஓ

Comments (0)