Sid Sriram – Inayae Lyrics

இணையே
என் உயிர் துணையே
உன் இமை திறந்தால்
நான் உறைவது ஏனடி

அழகே
என் முழு உலகம்
உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே
என் உயிர் துணையே
உன் இனிமையிலே
நான் கரைவது ஏனடா

யுகமாய்
கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா
இணையே...

மையல் காதலாய்
மாறிய புள்ளி என்றோ
மனம் கேட்குதே

காதல் காமமாய்
உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே
என் உயிர் துணையே
உன் இனிமையிலே
நான் கரைவது ஏனடி

யுகமாய்
கை விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இணையே
என் உயிர் துணையே
உன் இனிமையிலே
நான் கரைவது ஏனடி

யுகமாய்
உன் விரல் பிடித்து
நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

இணையே...

Comments (0)