Sid Sriram – Anthimaalai Neram Lyrics

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே

பேசி பேசி நாளும்
காலம் போக்க தோணும்
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே

நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே

மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்

உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே

சாம்பல் மேலே
பூவின் பாதம்
கோலம் ஆகிறதே

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே

யாரின் மழை மீது
யாரின் மழை சேர்ந்ததோ
யாரின் குடை வாங்கி
யாரின் மனம் போகுதோ

திறக்காத கதவாய்
பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்
புது நாள் சேருதே

வட்டம் போலே
வாழ்ந்தேன் காதல்
வாசல் வைக்கிறதே... ஏ...

அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
நிலா வந்ததே
என் நிலா வந்ததே

பேசி பேசி நாளும் (பேசி பேசி நாளும்)
காலம் போக்க தோணும் (காலம் போக்க தோணும்)
நாவிழுந்து வார்த்தை
போர்த்தி கொண்டதே

நதி நீரின் மேலே
வெளிச்சங்கள் போலே
விழுந்தாயே விரைந்தேனே
உருண்டோடினானே

Comments (0)