S. Janaki – Idhu Oru Nila Kaalam Lyrics

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ
பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ

வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ

கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
ஓ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

Comments (0)