இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ
பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
ஓ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
Comments (0)