சா... சா... மக மக சா
மக மக சா... சா
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
ஆ... ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
ஊதாத புல்லாங்குழல் எனதழகு
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையை
தேடாத வெள்ளை புற
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது
நீரூற்று பாயாத நிலம்போல நாலும்
என் மேனி தரிசாக கிடக்கின்றது
தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில்
எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
Comments (0)