ஹோ... ஹோஓ... ஹோ... ஹோஓ
வானம்தான் தீப் புடிச்சு
வெண்ணிலா எரிகிறதே
வீணைதான் நரம்பருந்து
வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம்
கழுதை தின்பது போல்
கடலில் கலக்கும் முன்பே நதிதான்
உப்பாய் கரிப்பதுவோ?
மூங்கில் காடே ஏரிகின்ற போது
குழல்தான் இசைத்திடுமோ?
தண்ணீர் எல்லாம் வெண்ணீரானால்
தாமரை மலர்ந்திடுமோ?
ஹோஒ... ஹோ... ஹோஒ
ஹோஒ... ஹோ... ஹோஒ
வானம்தான் தீப் புடிச்சு
வெண்ணிலா எரிகிறதே
வீணைதான் நரம்பருந்து
வீதியில் அழுகிறதே
கூறை வீட்டில் கொல்லி வைத்த போது
இந்தக் குருவிகள் எங்கே போகும்?
அதன் சிறகுகள் தீயில் வேகும்
கோயில்கள் எல்லாம் கல்லறைகள் ஆனால்
இந்தத் தெய்வம் எங்கே வாழும்
இது பாவம் செய்த பாவம்
வானவில்லே இரத்தமாகி போனதே
ரோசா பூவை மாடு மேஞ்சு போனதே
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே
என்ன நான் சொல்லுவேன்?
என்னவென்று சொல்லுவேன்?
ஹே... ஹே... ஹோஓஓஓ
வானம்தான் தீப் புடிச்சு
வெண்ணிலா எரிகிறதே
வீணைதான் நரம்பருந்து
வீதியில் அழுகிறதே
காதல் கவிதை எழுதிய காகிதம்
கழுதை தின்பது போல்
கடலில் கலக்கும் முன்பே நதிதான்
உப்பாய் கரிப்பதுவோ?
மூங்கில் காடே ஏரிகின்ற போது
குழல்தான் இசைத்திடுமோ?
தண்ணீர் எல்லாம் வெண்ணீரானால்
தாமரை மலர்ந்திடுமோ?
ஹோஒ... ஹோ... ஹோஒ
ஹோஒ... ஹோ... ஹோஒ
Comments (0)