காலங்கள் மாறும்
கனவெல்லாம் மாறும்
சொல்லாமல் இருதயங்கள்
இடம் மாறும்

நேற்றை போல் என்றும்
இன்றே இருக்காது
நாளைகள் நாளும் நிறம் மாறிடும்

சில காலம் சாரலும்
சில காலம் வெயிலும்
கடிகாரம் ஓட ஓட
காலம் மாறுது

மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது

அடடா நம் வாழ்க்கை என்பது
அதில் நூறு மாற்றம் கொண்டது
இருந்தாலும் எல்லா மாற்றமும்
அர்த்தம் உள்ளது
ஓஓஓ

பகலென்ன இரவின் மாற்றமே
இரவென்ன பகலின் மாற்றமே
மாற்றங்கள் தானே
வாழ்விலே மாயம் செய்யுது
ஓஓ

உறவே உன்னை பிரிவென்பதா
பிரிவே உன்னை உறவென்பதா
இரண்டும் சேரும் வலி என்பதே
சுகம் என்பதா

நினைவே உன்னை கனவென்பதா
கனவே உன்னை நினைவென்பதா
இது தான் வாழ்வின் அழகென்பதா
அடடா என்பதா

இன்று பூக்கும் பூக்கள்
நாளைக்கு வாடும்
இது தான் நேசமே
மறு நாளில் மீண்டும் பூ பூக்கும்
அது தான் வாழ்வின் அர்த்தமே
இருகரைகள் இல்லை என்றாலே
நதி பயணம் போகுமா
மாற்றங்கள் இல்லை என்றாலே
மனம் தன்னை உணருமா

வைகறை மேகம்
விடிகின்ற நேரம்
இரவென்னும் பாடல்
நிறம் மாறும்
வெயிலின் நாட்கள்
விடுமுறை கேட்கும்
மழை வந்து பூமி
முகம் மாறும்

மனம் ஒரு வானிலை
மழை வெயில் போலவே
எல்லாமும் சேர்ந்து வந்து
வாழ்க்கை மாறுதே

மாற்றங்கள் ஒன்று தான்
மாறாது வாழ்விலே
வண்ணங்கள் மாறி மாறி
வானம் நீளுது

நிமிடத்தில் நாட்கள் மாறிடும்
நொடிவொன்றில் வாழ்வே மாறிடும்
மாற்றங்கள் தானே நெஞ்சிலே
அர்த்தம் சேர்த்திடும் ஓஓ
பூக்கள் தான் சருகாய் மாறிடும்
சருகெல்லாம் பூவாய் மாறிடும்
மாற்றங்கள் தானே வாழ்விலே
மாயம் செய்திடும் ஓஓ

Comments (0)