Bombay Jayashri – Thaimai Lyrics

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ

திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவாதென்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே

Comments (0)