Balram – Innum Enna Thozha Lyrics

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே

யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே

வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம், எழுவோம்
இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக, எழுக

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்

விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே மனம், ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம், அதே திடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைக்கிறோம்

பனிமூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ-இதோ இணைந்ததோ
இனம்-இனம் நம் கையோடு
அதோ-அதோ தெரிந்ததோ
இடம்-இடம் நம் கண்ணோடு

யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே

வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் எழுவோம், எழுவோம்
இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக, எழுக

Comments (0)